Pages

Wednesday, January 5, 2011

அத்தான்...






என்னவனே...!

என் உயிர் சென்ற
தடத்தையெல்லாம்
தேடிப்பார் உன் நெஞ்சுக்குள்..
நம் காதலை
ஆராதித்து அர்ப்பணம்
செய்த மலர்த்தூவல்கள்
பரந்து கிடக்கும்.

அமைதியாய்
என்னை அனுபவிக்கும்
உன் மனதிற்குள்
ரகசியமாய் ஒரு பிரவேசம்
செய்கிறேன்..

என் கால் கொலுசோசை
கலைத்துவிட்ட காரணத்தினால்
கண்விழித்துக் கொள்கிறாய்
என்னைக்
கட்டி அணைக்கிறாய்..
முத்தம் பதிக்கிறாய்..
முழுதாய்ப் பறிக்கிறாய்..

உன் அணைப்பின்
சுகத்தில் சுகித்துக் கிடப்பவளை
சுமையெனக் கொள்வாயோ
எனை உயிருடன் கொல்வாயோ?
சொல்...
என்ன செய்யப் போகிறாய்....?
.
.

0 comments: